Sunday, October 13, 2024

வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே

வாய்ப்பு விலகும் போது கவலைபடாதே!
ஒரு ஐடி நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தார்.

ஒரு சின்ன இண்டர்வியூ:
என்னப்பா, தினமும் ஒழுங்கா வேலைக்கு வருவியா? முன் அனுபவம் இருக்கா?

அதெல்லாம் கரெக்டா வந்துடுவேன் சார். முன் அனுபவம் ஏதும் இல்லை. ஆனால் நல்லா வேலை பார்ப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கு சார்.

கடைசியில் அவரிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

'ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே' என்றார் துடைக்க வந்தவர்.

'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? அட ச்சே!' என்று அவரை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

கையில் 1000 ரூபாய் இருந்தது.

அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான்.

பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். 1000 ரூபாய் லாபம் கிடைத்தது.

மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டான்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.

அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க,
'ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா?

உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

'அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்' என்றார்!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.

எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப்பெரும் வெற்றி உங்களுக்காக காத்திருக்கும்.

No comments:

Post a Comment