மாட்டுப் பொங்கல்
மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகை நேற்று உலகத் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தை பொங்கலுக்கு மறுநாளாக இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
மக்கள் தங்கள் வாழ்வில் குடும்ப உறுப்பினர்களை போல் வாழும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மாட்டுப் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கலை ஒட்டி மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து விவசாயிகள், மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மாடு மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்குகள் வளர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். உழவுக்கு உயிரூட்டும் கால்நடைகளுக்கு இந்த நாளில் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் இருக்கும்.
மேலும் உழவுக்கருவிகளுக்கும் பூஜை செய்வார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி, வழிபாடு நடத்தி, பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். இந்த பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் கிராமங்கள் அனைத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதேநேரம் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
விவசாயத்தில் மனிதனுடன் இணைந்து மாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. காலப்போக்கில் இதனை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பாரம்பரியமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பணம் கொடுத்தால் உணவு வருவதற்கு முன், மற்றொரு ஜீவன் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சாப்பிடுகிறோம். இந்த உணர்வை மக்களுக்குள் கொண்டுவருவதற்காவே நம் கலாச்சாரத்தில் மாடுகளைக் கொண்டாடும் விழாவை போன்ற வழக்கத்தை உருவாக்கியிருக்கின்றனர்.
மாடு மட்டுமல்ல, நம்மைச் சுற்றிலும் உயிரினங்கள் இல்லையென்றால் மனித இனம் இங்கே பிழைத்திருக்க முடியாது. மேலும் நாம் விவசாய கலாச்சாரமாக வளர்ந்திருப்பதால், மாட்டுக்கும், நமக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது. நமது வயலில் உழைப்பதும், நமக்குப் பால் தருவதும் மாடுதான். நம்மை ஈன்ற தாய்க்கு அடுத்து, இரத்தத்தைப் பாலாக்கி நம் உயிர் வளர்த்ததால், மாடு தாய்க்கு சமமானது. குழந்தைகளிடம், பால் கொடுக்கும் மாடு தாய்க்கு ஒப்பானது என்று அறிவுறுத்துவது நமது பண்பாடு.. அதனால் மாட்டுடன் ஒரு ஆழமான பிணைப்பு உருவாகிறது.
மனித புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டுவருவதையே அறிவியல் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. இதனால் மற்ற உயிரினங்கள் அழிந்து போவது மட்டுமில்லாமல், நமது உயிரும் தழைக்காது. உதாரணத்துக்கு, விவசாயத்துக்கு இன்றியமையாத ஆடு மாடுகளைப் புறக்கணித்துவிட்டால் மண்ணுக்கான இயற்கை உரம் நமக்கு எப்படிக் கிடைக்கும்? இயந்திரங்கள் மாடுகளைவிட அதிகம் செயல்படலாம். ஆனால் மண்ணுக்கு வளம் பெருக்கும் சாணம் கிடைக்காது, கார்பண்டை ஆக்சைட், மொனாக்சைட்தான் கிடைக்கிறது.கால்நடைகள் இல்லாமல் விவசாயம் செய்வது என்பது நகைப்புக்குரியதுதான். மண்ணின் வளம் காப்பதற்கும் ,பின் வரும் தலைமுறையினருக்கு செழிப்பான மண்ணை விட்டுச் செல்வதற்கும் ஆடு, மாடுகள், அதன் கழிவுகள் தேவை.
பன்னிரண்டாயிரம் வருட பாரம்பரியமான விவசாயத்தில், காப்பாற்றி வந்த மண்ணை, ஒரே தலைமுறையில் பாலைவனமாக்கிவிடாமல் இருக்கவேண்டும். நாம் மண்ணை, தாய்மண் என்று குறிப்பிடுகிறோம். இந்தத் தாய்மண்ணைக் காப்பாற்றிக்கொள்ளவில்லை என்றால் உயிர் எப்படிப் பிறக்கும், உயிர் எப்படி உறுதியாக இருக்கும்? அதற்காக இந்த மாட்டுப்பொங்கல். மாடுகளைப் போற்றி வளர்த்துக் கொண்டாடும் நம் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கும் நோக்கத்தில், நீங்கள் எங்கிருந்தாலும், இந்த நாளில் ஒரு இரண்டு நிமிடம் ஒரு மாட்டினிடத்தில் ஒரு சிறு தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் தேவையானது.
உழவனின் நண்பன் என சொல்லப்படும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த ஜனவரி 15 திருநாளை மாட்டு பொங்கலாக கொண்டாடப்படுகிறது, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கும், காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு மாட்டுப்பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது.
யாத்திராகமம் 23:16
நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
என்ற வேத வசனத்தின் படி ஆண்டவரின் ஆசீர்வாதம் கிடைப்பதற்கு உழவனின் நண்பனை படைத்த கடவுளுக்கு நன்றி சொல்லும் நாள்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பெத்லகேமிலுள்ள மாட்டுத் தொழுவத்தில் எளிமையாக பிறந்தார். மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் இரவு நேரத்தில் ஆடுகளைக் காத்துக் கொண்டிருந்தார்கள், அப்போது ஒரு பிரகாசமான ஒளி அவர்களைச் சுற்றி ஜொலித்தது. ஆம், அது ஒரு தேவதூதனே! மேய்ப்பர்கள் மிகவும் பயந்து போனார்கள். ஆனால் அந்தத் தேவதூதன்: ‘பயப்படாதிருங்கள்! நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன். இன்று, பெத்லகேமில் கர்த்தராகிய கிறிஸ்து பிறந்திருக்கிறார். அவர் ஜனங்களை மீட்பார்! அவரைத் துணிகளில் சுற்றி முன்னணையில் படுக்க வைத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்’ என்று சொன்னார். அப்போது திடீரென நிறைய தேவதூதர்கள் தோன்றி கடவுளைத் துதிக்கத் தொடங்கினார்கள். அதனால் இந்த மேய்ப்பர்கள் இயேசு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க அவசர அவசரமாக சென்றார்கள், கடைசியில் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
ஒரு தேவதை மேய்ப்பர்களிடம், அவர்கள் புதிதாகப் பிறந்த மேசியாவையும் கர்த்தரையும் "தொட்டியில் கிடப்பதை" கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார் (லூக்கா 2:12). அவர்கள் அவசரமாகச் சென்று, உணவுத் தொட்டியில் குழந்தையைக் கண்டார்கள், அவர்கள் அதைக் கண்களுக்கு விருந்து செய்தார்கள் (லூக் 2:16).
இயேசு தற்செயலாக கால்நடைத் தொட்டியில் வைக்கப்படவில்லை. இது ஒரு முக்கிய ஆன்மீக சின்னம். விலங்குகள் உடல் உணவுக்காக தொழுவத்திற்கு செல்கின்றன, ஆனால் இயேசு வைக்கோலில் படுத்திருப்பதால், நாம் ஆன்மீக உணவுக்காக தொழுவத்திற்கு செல்லலாம். இயேசுவுக்கு எல்லையற்ற போஷாக்குக் கிடங்கு உள்ளது, நாம் எப்போது வேண்டுமானாலும் அவரை அணுகலாம், பசியுடன் இருக்க முடியாது. இயேசு நமக்கு வார்த்தை மற்றும் சாக்ரமென்ட், அவரது நற்செய்தி மற்றும் நற்கருணை மூலம் உணவளிக்கிறார். அவருடைய வார்த்தையை நாம் விழுங்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் (எரே. 15:16; Ez 3:1; Rev 10:9-10), அதை மென்று, மெதுவாக அதன் அர்த்தத்தை அலசி, விழுங்கி, ஜீரணித்து, அதை நமது துணியின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இருப்பது. இயேசுவின் வார்த்தை வேறு எந்த உணவையும் போல இல்லை, அது நம் ஆத்துமாக்களை இரட்சிக்கும் வல்லமை கொண்டது (யாக் 1:21). அதுமட்டுமின்றி, உணவுத் தொட்டியில் உள்ள குழந்தை ஜீவ அப்பம் (யோவான் 6:35), உண்மையான அப்பம் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறது, இந்த அப்பத்தை உண்பவன் என்றென்றும் வாழ்வான் (யோவான் 6:51). ஒரு நபர் ஆன்மீக ரீதியில் நன்றாக இருக்க விரும்பினால், வேதாகமத்தை வாசிப்பது மற்றும் நற்கருணையை அடிக்கடி பெறுவது முக்கியம்.
தீவனம் என்பது இயேசு நமக்கு உணவளிக்கும் ஒரு முக்கிய அடையாளம். மேய்ப்பர்கள் முதலில் விருந்து வைத்தனர். இப்போது நமது முறை. முதல் கிறிஸ்துமஸில் பிறந்த இயேசு நம் ஆன்மாவுக்கு உணவாக இருக்கிறார்.
வீரத்தமிழர்களுக்கும், உழவனின் நண்பனுக்கும் எமது இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
#மாட்டுப்பொங்கல் #mattupongal #Godlovesyou God loves you Suganraj L