Wednesday, January 15, 2025

ஆண்டவனை காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, அடுத்து தைப்பொங்கல், பின்பு மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல் ஆகும்.

சாதி, சமய வேறுபாடின்றி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். இப்பண்டிகையில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரின் ஆசி பெறுதல் என்பன அடங்கும். அதாவது வீட்டில் இருக்கும் வயதுக்கு மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்று கொள்வார்கள். தங்கள் அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதற்காக கொண்டாடப்படுவது எனலாம்.

பொங்கல் பானை வைக்கும் போது அதில் புது மஞ்சள் கொத்தினைக் கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். காணும் பொங்கல் என்றால் குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுக்துக்கொண்டு பிடித்த இடத்திற்கு செல்வது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக காக்க, குருவிக்கு அன்னமிட வேண்டும் என்பதே கதை. ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து ஐந்து வகையான சாதங்களை வைக்க வேண்டும்.

“காக்கப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம், கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம், கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்” என்று சொல்லி படையல் வைக்க வேண்டும்.

உடன்பிறந்தவர்கள் உள்ளுரில் இருந்தால் அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன் பிறந்தவர்களையும் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள், அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்று கூடி காணப்படும் இந்நேரத்தில், 

2 கொரிந்தியர் 9:10
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.

என்ற வேத வசனத்தின் படி நமது ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் இரக்கமும் கிருபையும் நம்மை ஆசீர்வதித்து உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நன்மைகள் பெருக வாக்குரைத்த தேவன் அதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். விசுவாசத்தோடு அதைப் பெற்றுக் கொள்ள நம்மை நாமே தகுதி படுத்திக் கொண்டு இயேசுவின் மூலம் பிதாவை வேண்டி ஜெபித்து அற்புதங்களை காணுங்கள். இது தான் காணும் பொங்கல். ஆம், உண்மையில் கடவுளைக் காண்பதே காணும் பொங்கலை சிறந்த முறையில் கொண்டாடுவதாகும். 

செல்வ வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து வேண்டி இந்த நாளை கொண்டாடினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வ வளம் நிறைந்ததாக, மங்களகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

#காணும்பொங்கல் #KaanumPongal #Godlovesyou God loves you Suganraj L

Tuesday, January 14, 2025

மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே

மாட்டுப் பொங்கல்

மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகை நேற்று உலகத் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தை பொங்கலுக்கு மறுநாளாக இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மக்கள் தங்கள் வாழ்வில் குடும்ப உறுப்பினர்களை போல் வாழும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மாட்டுப் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கலை ஒட்டி மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து விவசாயிகள், மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மாடு மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்குகள் வளர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். உழவுக்கு உயிரூட்டும் கால்நடைகளுக்கு இந்த நாளில் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் இருக்கும்.

மேலும் உழவுக்கருவிகளுக்கும் பூஜை செய்வார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி, வழிபாடு நடத்தி, பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். இந்த பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் கிராமங்கள் அனைத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதேநேரம் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறும். 

விவசாயத்தில் மனிதனுடன் இணைந்து மாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. காலப்போக்கில் இதனை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பாரம்பரியமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பணம் கொடுத்தால் உணவு வருவதற்கு முன், மற்றொரு ஜீவன் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சாப்பிடுகிறோம். இந்த உணர்வை மக்களுக்குள் கொண்டுவருவதற்காவே நம் கலாச்சாரத்தில் மாடுகளைக் கொண்டாடும் விழாவை போன்ற வழக்கத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

மாடு மட்டுமல்ல, நம்மைச் சுற்றிலும் உயிரினங்கள் இல்லையென்றால் மனித இனம் இங்கே பிழைத்திருக்க முடியாது. மேலும் நாம் விவசாய கலாச்சாரமாக வளர்ந்திருப்பதால், மாட்டுக்கும், நமக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது. நமது வயலில் உழைப்பதும், நமக்குப் பால் தருவதும் மாடுதான். நம்மை ஈன்ற தாய்க்கு அடுத்து, இரத்தத்தைப் பாலாக்கி நம் உயிர் வளர்த்ததால், மாடு தாய்க்கு சமமானது. குழந்தைகளிடம், பால் கொடுக்கும் மாடு தாய்க்கு ஒப்பானது என்று அறிவுறுத்துவது நமது பண்பாடு.. அதனால் மாட்டுடன் ஒரு ஆழமான பிணைப்பு உருவாகிறது.

மனித புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டுவருவதையே அறிவியல் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. இதனால் மற்ற உயிரினங்கள் அழிந்து போவது மட்டுமில்லாமல், நமது உயிரும் தழைக்காது. உதாரணத்துக்கு, விவசாயத்துக்கு இன்றியமையாத ஆடு மாடுகளைப் புறக்கணித்துவிட்டால் மண்ணுக்கான இயற்கை உரம் நமக்கு எப்படிக் கிடைக்கும்? இயந்திரங்கள் மாடுகளைவிட அதிகம் செயல்படலாம். ஆனால் மண்ணுக்கு வளம் பெருக்கும் சாணம் கிடைக்காது, கார்பண்டை ஆக்சைட், மொனாக்சைட்தான் கிடைக்கிறது.கால்நடைகள் இல்லாமல் விவசாயம் செய்வது என்பது நகைப்புக்குரியதுதான். மண்ணின் வளம் காப்பதற்கும் ,பின் வரும் தலைமுறையினருக்கு செழிப்பான மண்ணை விட்டுச் செல்வதற்கும் ஆடு, மாடுகள், அதன் கழிவுகள் தேவை.

பன்னிரண்டாயிரம் வருட பாரம்பரியமான விவசாயத்தில், காப்பாற்றி வந்த மண்ணை, ஒரே தலைமுறையில் பாலைவனமாக்கிவிடாமல் இருக்கவேண்டும். நாம் மண்ணை, தாய்மண் என்று குறிப்பிடுகிறோம். இந்தத் தாய்மண்ணைக் காப்பாற்றிக்கொள்ளவில்லை என்றால் உயிர் எப்படிப் பிறக்கும், உயிர் எப்படி உறுதியாக இருக்கும்? அதற்காக இந்த மாட்டுப்பொங்கல். மாடுகளைப் போற்றி வளர்த்துக் கொண்டாடும் நம் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கும் நோக்கத்தில், நீங்கள் எங்கிருந்தாலும், இந்த நாளில் ஒரு இரண்டு நிமிடம் ஒரு மாட்டினிடத்தில் ஒரு சிறு தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் தேவையானது. 

உழவனின் நண்பன் என சொல்லப்படும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த ஜனவரி 15 திருநாளை மாட்டு பொங்கலாக கொண்டாடப்படுகிறது, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கும், காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு மாட்டுப்பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது.

யாத்திராகமம் 23:16
நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.

என்ற வேத வசனத்தின் படி ஆண்டவரின் ஆசீர்வாதம் கிடைப்பதற்கு உழவனின் நண்பனை படைத்த கடவுளுக்கு நன்றி சொல்லும் நாள். 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பெத்லகேமிலுள்ள மாட்டுத் தொழுவத்தில் எளிமையாக பிறந்தார். மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் இரவு நேரத்தில் ஆடுகளைக் காத்துக் கொண்டிருந்தார்கள், அப்போது ஒரு பிரகாசமான ஒளி அவர்களைச் சுற்றி ஜொலித்தது. ஆம், அது ஒரு தேவதூதனே! மேய்ப்பர்கள் மிகவும் பயந்து போனார்கள். ஆனால் அந்தத் தேவதூதன்: ‘பயப்படாதிருங்கள்! நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன். இன்று, பெத்லகேமில் கர்த்தராகிய கிறிஸ்து பிறந்திருக்கிறார். அவர் ஜனங்களை மீட்பார்! அவரைத் துணிகளில் சுற்றி முன்னணையில் படுக்க வைத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்’ என்று சொன்னார். அப்போது திடீரென நிறைய தேவதூதர்கள் தோன்றி கடவுளைத் துதிக்கத் தொடங்கினார்கள். அதனால் இந்த மேய்ப்பர்கள் இயேசு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க அவசர அவசரமாக சென்றார்கள், கடைசியில் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

ஒரு தேவதை மேய்ப்பர்களிடம், அவர்கள் புதிதாகப் பிறந்த மேசியாவையும் கர்த்தரையும் "தொட்டியில் கிடப்பதை" கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார் (லூக்கா 2:12). அவர்கள் அவசரமாகச் சென்று, உணவுத் தொட்டியில் குழந்தையைக் கண்டார்கள், அவர்கள் அதைக் கண்களுக்கு விருந்து செய்தார்கள் (லூக் 2:16).

இயேசு தற்செயலாக கால்நடைத் தொட்டியில் வைக்கப்படவில்லை. இது ஒரு முக்கிய ஆன்மீக சின்னம். விலங்குகள் உடல் உணவுக்காக தொழுவத்திற்கு செல்கின்றன, ஆனால் இயேசு வைக்கோலில் படுத்திருப்பதால், நாம் ஆன்மீக உணவுக்காக தொழுவத்திற்கு செல்லலாம். இயேசுவுக்கு எல்லையற்ற போஷாக்குக் கிடங்கு உள்ளது, நாம் எப்போது வேண்டுமானாலும் அவரை அணுகலாம், பசியுடன் இருக்க முடியாது. இயேசு நமக்கு வார்த்தை மற்றும் சாக்ரமென்ட், அவரது நற்செய்தி மற்றும் நற்கருணை மூலம் உணவளிக்கிறார். அவருடைய வார்த்தையை நாம் விழுங்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் (எரே. 15:16; Ez 3:1; Rev 10:9-10), அதை மென்று, மெதுவாக அதன் அர்த்தத்தை அலசி, விழுங்கி, ஜீரணித்து, அதை நமது துணியின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இருப்பது. இயேசுவின் வார்த்தை வேறு எந்த உணவையும் போல இல்லை, அது நம் ஆத்துமாக்களை இரட்சிக்கும் வல்லமை கொண்டது (யாக் 1:21). அதுமட்டுமின்றி, உணவுத் தொட்டியில் உள்ள குழந்தை ஜீவ அப்பம் (யோவான் 6:35), உண்மையான அப்பம் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறது, இந்த அப்பத்தை உண்பவன் என்றென்றும் வாழ்வான் (யோவான் 6:51). ஒரு நபர் ஆன்மீக ரீதியில் நன்றாக இருக்க விரும்பினால், வேதாகமத்தை வாசிப்பது மற்றும் நற்கருணையை அடிக்கடி பெறுவது முக்கியம்.

தீவனம் என்பது இயேசு நமக்கு உணவளிக்கும் ஒரு முக்கிய அடையாளம். மேய்ப்பர்கள் முதலில் விருந்து வைத்தனர். இப்போது நமது முறை. முதல் கிறிஸ்துமஸில் பிறந்த இயேசு நம் ஆன்மாவுக்கு உணவாக இருக்கிறார்.

வீரத்தமிழர்களுக்கும், உழவனின் நண்பனுக்கும் எமது இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

#மாட்டுப்பொங்கல் #mattupongal #Godlovesyou God loves you Suganraj L

Monday, January 13, 2025

தை பிறந்தால்.. வழி பிறக்கும்..

இனிய "அறுவடை திருவிழா" நல்வாழ்த்துக்கள்!

அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து சூரிய பகவான் உதயமாகும் முன் பொங்கல் வைத்து சாமிக்கும் படைக்கும் பொங்கல் திருநாள் தமிழக மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. அந்த வகையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன.14ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படும். போகி பண்டிகை தொடங்கி திருவள்ளுவர் தினம் வரை என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த நாளில் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், கால்நடைகளை படைத்த கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம்.

அன்பும் பண்பும் பெருகிட வறுமை நீங்கி செல்வம் பொங்க அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

அறியாமை அகன்று அறிவு பொங்க பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர்கள் மதம், சாதி வேறுபாடு கடந்து ஒற்றுமையாக கொண்டாடும் பண்டிகை பொங்கல். 4 நாட்கள் தமிழ்நாடே மிகப்பெரிய கொண்டாட்டமாக, திருவிழா போல மாறும் பண்டிகை ஆகும் இது. விவசாய பண்டிகை என்பதை தாண்டி.. இது தமிழ்நாட்டின் பல கலாச்சார மக்களும் கொண்டாடும் பண்டிகை ஆகும்.

இந்த பண்டிகை நாட்களில், வெளியூரில் இருப்பவர்கள் தொடங்கி பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வரை என அனைவருக்கும் வாட்ஸ் ஆப்பில் மெசஜ்களாகவும், ஸ்டேட்டஸ் வைத்தும், முகநூலில் வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடும் இந்த நிலையில், நீங்கள் உங்கள் நெருக்கமானவர்களுக்கு பகிரக்கூடிய வாழ்த்து செய்திகளையும், வண்ணமயமான வாழ்த்து அட்டைகளையும்  அனுப்பி மகிழ்வோம்!

அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கையும் புதிய தொடக்கங்களையும் உங்கள் வாழ்வில் கொண்டுவர இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

பொங்கல் என்ற சொல் நேரடியாக பயன்படுத்தப்பட்டாலும், பண்டைய காலங்களில் இது 'அறுவடை திருவிழா' என்றும் அழைக்கப்பட்டது. சோழர் கால கல்வெட்டுகளில் 'புதியீடு விழா', 'மகர சங்கரமணப் பெரும் பொங்கல்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற மொழி பேசுபவர்கள் இதை 'மகர சங்கராந்தி' என்றும் அழைக்கின்றனர். இது அக்கால அரசர்களின் ஆட்சிப் பகுதிகள் பரந்து விரிந்திருந்ததால், அந்தந்த பகுதி மக்களின் சொல் வழக்கிற்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கலாம் என குடவாயில் பாலசுப்ரமணியன் கூறுகிறார்.

முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் பொங்கல் பற்றிய வரலாற்று ஆதாரம் கிடைக்கிறது. திருவொற்றியூர் கல்வெட்டில் இது 'புதியீடு விழா' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழன் கால கல்வெட்டில் 'மகர சங்கரமணப் பெரும் பொங்கல்' என்ற குறிப்பு உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைப்பொங்கல் தினத்தில் ராஜேந்திரசோழன் காவிரியில் புனித நீராடியதற்கான கல்வெட்டு ஆதாரமும் உள்ளது.

புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு, சீவகசிந்தாமணி போன்ற இலக்கியங்களிலும் பொங்கல் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை பொங்கல் விழா தமிழர்களின் பழமையான பாரம்பரிய விழா என்பதை உறுதிப்படுத்துகின்றன.

பொங்கல் விழா, தமிழர்களின் உழவுத் தொழிலுடன் இணைந்த, இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு தனித்துவமான விழாவாகும். இதன் வரலாறு மிகவும் பழமையானது. பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் இதனை நாம் அறிய முடிகிறது. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வுகள், பொங்கல் விழாவின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை நமக்கு தெளிவாக விளக்குகின்றன. வாழ்வின் அனைத்து சந்தோஷங்களையும் உங்கள் குடும்பத்துடன் பகிர்ந்து கொண்ட பொங்கல் வாழ்த்துக்கள்..

பொங்கல் பானை பொங்கி வழிவது போல, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சியும் செல்வமும் பொங்கி வழிய என இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வீட்டில் புன்னகை பொங்க..இனம் புரியா இன்பம் மனதில் பொங்க...நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க..பொங்கட்டும் தைப் பொங்கல்

தை பிறந்தால்.. வழி பிறக்கும்..

உபாகமம் 7:13
உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

என்ற வேத வசனத்தின் படி தெய்வத்தின் அருளும் ஆண்டவரின் ஆசியும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கட்டும். பொங்கல் நல்வாழ்த்துகள்!

God loves you Suganraj L 

#Godlovesyou #pongal #makarsankranti #festival #pongalcelebration #sankranti #lohri #india #tamil #happypongal #tamilnadu #instagram #chennai #photography #trending #bhfyp #love #pongalfestival #pongalopongal #uttarayan #happy #indianfestival #pongalwishes #celebration #instagood #kitefestival #tamilmemes #happymakarsankranti #southindianfood #kites