Friday, February 2, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

தேர்தல் முடிவுக்காக ஜெபிப்போம்!

வாக்கு எண்ணிக்கையின் போது எந்த இடத்திலும் குளறுபடிகள் உண்டாகாதிருக்க...! 

வாக்கு எண்ணப்படும் மையங்களுக்காக...! 

வாக்கு என்னும் அதிகாரிகள்/ஊழியர்களுக்காக...! 

வாக்கு எண்ணும் சமயத்தில் கலவரங்கள்/பதட்டங்கள் ஏற்படாமலிருக்க...! 

நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வர...! 

மக்கள் மீது கரிசனையுள்ள, திறமையுள்ள தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட...! 

லஞ்ச ஓழலை வெறுக்கிற பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்பட...! 

பாராளுமன்ற தேர்தல் மூலம் தேவனுடைய திட்டமும், சித்தமும் நிறைவேற...! 

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து பாதுகாப்பு அதிகாரிகள், வீரர்களுக்காக...! 

வெற்றி தோல்வியினிமித்தம் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமலிருக்க...! 

வாக்கு முடிவு குறித்த தவறான தகவல்கள் அளிக்கப்படாதிருக்க...!

God loves you  

#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

Pray for election 2024

‭‭18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

ஆட்சியாளர்களைக் குறித்து பரிசுத்த வேதாகமத்தில்...

‭‭சங்கீதம்‬ ‭102:17‬ ‭
பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.

‭‭‭‭நீதிமொழிகள்‬ ‭16:12‭-‬13‬ ‭
[12] அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். 
[13] நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

‭‭நீதிமொழிகள்‬ ‭20:28‬ ‭
தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.

நீதிமொழிகள்‬ ‭25:3‬ ‭
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.

‭‭நீதிமொழிகள்‬ ‭28:15‬ ‭
ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.

‭‭நீதிமொழிகள்‬ ‭29:4‬ ‭
[4] நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
[14] ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.

தேர்தலுக்காக... 

தினமும் அதிகாலையில் ஜெபிக்கலாம் 

தினமும் இரவில் ஜெபிக்கலாம் 

வாரத்திற்கு ஒருதரம் உபவாசிக்கலாம் 

ஞாயிறு ஆராதனையில் 10 நிமிடம் ஜெபிக்கலாம் 

வாரம் ஒருமுறை இரவில் கூடி ஜெபிக்கலாம் 

மாதம் ஒருமுறை இரவில் கூடி ஜெபிக்கலாம் 

வாரம் ஒருமுறை ஒரு ஜாமம் ஜெபிக்கலாம் 

தினமும் ஒரு தொகுதிக்காக ஜெபிக்கலாம் 

தினமும் ஒரு மாநில தொகுதிக்காக ஜெபிக்கலாம் 

விசுவாசிகளுக்கு ஒரு தொகுதியின் பெயரைக் கொடுத்து ஜெபிக்க வைக்கலாம் 

முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் விசேஷித்த கவனம் செலுத்தி ஜெபிக்கலாம் 

தாலுகா வாரியாக ஜெப கூடுகைகளை ஒழுங்குப்படுத்தி ஜெபிக்கலாம் 

ஜெபவீரர்களுக்கு தேர்தல் ஜெபக் குறிப்புகளை கொடுத்து ஜெபிக்க வைக்கலாம் 

தேர்தல் ஜெப நாள் என அறிவித்து விசேஷமாக சபைகளில் ஜெபிக்கலாம் 

ஊழியர் ஐக்கியங்களில் ஜெபிக்க விசேஷமாக ஜெபத் திட்டங்களை ஏற்படுத்தலாம் 

24 மணி நேர சங்கிலி ஜெபங்களை நடத்தலாம் 

72 மணி நேர துதி ஆராதனை ஜெபத்தை நடத்தலாம் 

சிறுவர் ஜெப குழுக்களை ஏற்படுத்தலாம் 

வாலிபர் ஜெப குழுக்களை ஏற்படுத்தலாம் 

பெண்கள் ஜெப குழுக்களை ஏற்படுத்தலாம் 

உபவாசித்து ஜெபிக்கும் குழுக்களை எழுப்பலாம் 

God loves you 

#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

Thursday, February 1, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

நம்முடைய தேவன்...

‭‭தானியேல்‬ ‭2:21‬ ‭
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்

‭‭தானியேல்‬ ‭5:21‬ ‭
உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் 

‭‭நீதிமொழிகள்‬ ‭21:1‬ ‭
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

‭‭எரேமியா‬ ‭23:5‬ ‭
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

‭‭சங்கீதம்‬ ‭18:50‬ ‭
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

‭‭சங்கீதம்‬ ‭47:2‬ ‭
உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.

‭‭சங்கீதம்‬ ‭103:19‬ ‭
கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது.

‭‭சங்கீதம்‬ ‭146:10‬ ‭
கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரீகம்பண்ணுகிறார். அல்லேலூயா.

தேர்தல் நாட்களில்...

வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் 

வேட்பு மனு பரிசீலனை நாள் 

முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் 

முதல் கட்ட தேர்தல் நாள் 

இரண்டாம் கட்ட தேர்தல் நாள் 

மூன்றாம் கட்ட தேர்தல் நாள் 

நாலாம் கட்ட தேர்தல் நாள் 

ஐந்தாம் கட்ட தேர்தல் நாள் 

உங்கள் தொகுதிக்காக... 

தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை தனித்து, விழித்து, உபவாசித்து, சபையாய், குழாவாய், ஜாமங்காத்து, ஜெபநடை மற்றும் சங்கிலி ஜெபம் செய்ய வேண்டும். 

ஜெபம் சிறிதானாலும் அதன் விளைவு பெரிது.

God loves you 

#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india